Friday, November 9, 2012

புரியவில்லை..

மொட்டைமாடியில்
சாய்ந்து நிற்கும்
தென்னங்கீற்றின் பின்னால்
பரீட்சைக்கு
தீவிரமாக
அவள் ...

நானும்
அதே தீவிரமான
பாசாங்குடன்
எதிர்மாடியில் ...

இரு புருவங்களின்
மத்தியில்
பேனாவின் பின்முனையால்
 தட்டியபடி
அவள் திரும்ப ....

ஆள்காட்டி விரலால்
காற்றில் வரைந்து,
மனனம் செய்ததை
எழுதிப்பார்க்கும்
என் நடிப்பு ...

எட்டு வருடங்கள்
ஆகிவிட்டது
வீடு காலி செய்து .....

இன்னும் எனக்குப்
புரியவில்லை ......

இருட்டிய பிறகும்
விளக்கில்லாத அந்த
மொட்டைமாடியில்,
என்ன
படித்துக்கொண்டிருந்தாள் ..?

No comments: