Friday, November 9, 2012

முரண்பிழை..!

கக்கித் தெறிக்கும்

வெறுப்புக் கனல்கள்

எல்லோரையும் பஸ்பமாக்கும்

எரிமலைக் குளம்புகளாய்,

பனிமலையின் நடுவில்....



ஆரத்தழுவி

அணைத்துப் புரண்டு

சிலிர்க்கும் தருவாயில்

மிதித்துத் தள்ளி

கதவடைத்து

உரக்க கத்துகிறேன்

தலையணை கடித்தபடி...





உணவு கொடுத்து

மருந்து மறுத்து

பிளந்த காயங்களுடன்

உயிர்மட்டும் மிச்சம் வைக்கும்

போர்க் கைதிபொல...

காலில் பணிந்து

கண்ணீரில் கழுவி

கதறி மன்றாட,

மண்ணில் தேய

முகத்தில்  மிதித்து

 கால்தடம் பதிய

கடந்து செல்கிறேன்...



அழ முடியாமல்

சிரிக்கவும் இயலாமல்

என்னயே எரித்தாவது

 துண்டுதுண்டாய் - உன்னை

சிதைத்துப் பார்க்கத் துடிக்கும்

என்  அந்தரங்கத்தின்

ஆற்றாமை....

"காதல்" என்கிற

வலியை சுமந்தபடி....

No comments: